மரூஃப் கார்க்கி என்னும் முஸ்லீம் குருவிடம் ஒரு சீடன் வந்து, நான் தங்களைப் பற்றி மக்களிடம்
பேசிக் கொண்டிருந்தேன். அப்போது யூதர்கள் உங்களைத் தங்களுடைய குருவாகப் போற்றிப் புகழ்கிறார்கள்.
கிறித்துவர்கள் உங்களைத் தங்களுடைய இறைவாக்கினராக வழிபடுகிறார்கள். முஸ்லீம்கள் உங்களை
மகிமையானவராக மதிக்கிறார்கள் என்று கூறினான். அதற்கு மரூஃப், நான் பாக்தாத்தில் இருக்கும்
போது இப்படிக் கூறுகிறார்கள். நான் எருசலேமில் இருந்த போது யூதர்கள் என்னைக் கிறிஸ்துவனாகப்
பாவித்தார்கள். கிறித்துவர்கள் என்னை முஸ்லீமாகக் கருதினார்கள். முஸ்லீம்கள் என்னை யூதராக
நினைத்தார்கள் என்றார். அப்படியென்றால் நாங்கள் உங்களை எப்படி நினைக்க வேண்டும் என்று
சீடன் கேட்டான். அதற்கு அவர், என்னை ஒரு மனிதனாக நினையுங்கள் என்று கூறினார்