2010-04-30 16:00:02

சீனாவின் ஷங்கை உலக அருங்காட்சியகத்தின் போது, ஷேஷன் அன்னைமரி திருத்தலத்தைப் பல்லாயிரக்கணக்கானப் பயணிகள் தரிசிப்பார்கள்


ஏப்ரல்30,2010 சீனாவின் ஷங்கையில் தொடங்கவிருக்கின்ற ஆறுமாதகால உலக அருங்காட்சியகத்தின் போது, அந்நகரிலுள்ள புகழ் பெற்ற ஷேஷன் அன்னைமரி திருத்தலத்தைப் பல்லாயிரக்கணக்கானப் பயணிகள் தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கையில் ஒரு குன்றின்மீது அமைந்துள்ள இம்மாதா திருத்தலத்திற்குப் பயணிகள் வரவிருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன.

இந்த ஷங்கைய் உலக அருங்காட்சியகத்தில் 192 நாடுகளும் 50 சர்வதேச நிறுவனங்களும் கலந்து கொள்ளவிருக்கின்றன. இன்னும், ஏழு கோடிப் பேர் இதனைப் பார்வையிடுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.