2010-04-28 16:19:32

ஏப்ரல் 29 நாளும் ஒரு நல்லெண்ணம்


நன்றாகக் கேட்பது என்பது மற்றவர்களது பேச்சைக் கேட்பது மட்டும் அல்ல, ஒருவர் தம்மையே கேட்பதும்தான். நன்றாகப் பார்க்கிறது என்பது மற்றவரைப் பார்க்கிறது மட்டுமல்லாமல் ஒருவர் தம்மையே பார்க்கிறதும்தான். ஏனெனில் தம்மையே கேளாதவர்கள் மற்றவரைப் புரிந்து கொள்கிறதில்லை. தங்களையே நுணுக்கமாக ஆராயாத மற்றவர்களின் மெய்மையைக் காண முடியாத குருடர்களாக, அவர்கள் இருக்கிறார்கள். நன்றாகக் கேட்கிறவர் நீங்கள் எதுவும் பேசாவிட்டாலும் உங்களைக் கேட்கிறார் என்று சொன்னவர் சேசு சபை அருட்தந்தை டோனி டிமெல்லோ.

செய்தித்தாளை ஊன்றிப் படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், தனது கணவரிடம் கூறினார் – நீங்கள் இனிமேல் ஊம். ஆமாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே பேசுகிறதை நிறுத்தி விட்டேன் என்று







All the contents on this site are copyrighted ©.