2010-04-26 15:44:48

முத்திப் பேறு பெற்ற ஆஞ்சலோ பவுலின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழ திருத்தந்தை வேண்டுகோள்


ஏப்ரல்26,2010 அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் இஞ்ஞாயிறன்று முத்திப் பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட கார்மேல் சபை குரு Angelo Paoli, கப்புச்சின் குரு José Tous y Soler ஆகிய இருவரையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

Lunigiana வைச் சேர்ந்தவரான Angelico Paoli, 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். உரோமையில் பிறரன்பின் திருத்தூதர் எனப் பெயர் பெற்றிருந்தவர். ஏழைகளின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார். San Giovanni மருத்துவமனையில் நோயாளிகளைப் பராமரித்து வந்த இவர், திருநற்கருணையிலிருந்து தனது பணிக்கான சக்தியைப் பெற்றிருந்தார். கார்மேல் அன்னை மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், கடும் தபத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இந்த அருட்பணியாள்கள் ஆண்டில் அனைத்து அருட்பணியாளர்களும், சிறப்பாக அப்போஸ்தல வாழ்வைச் சேர்ந்த துறவு நிறுவனங்களில் வாழ்வோர் இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுமாறு தான் மகிழ்வோடு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.