ஏப்ரல்26,2010 வன்முறை, பயன்படுத்தல், பாராமுகம் ஆகியவற்றுக்குப் பலியாகும் சிறாருக்கு
ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இத்தாலிய தேசிய நாளைக் கடந்த 14 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும்
"Meter" என்ற கழகத்துக்குத் தனது சிறப்பு வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை.
பங்குகளிலும்
பள்ளிகளிலும் கழகங்களிலும் சிறாருக்குப் பணியாற்றும் அனைவருக்கும், குறிப்பாக, பெற்றோர்,
ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்த்தோடு இந்த
இறையழைத்தல் ஞாயிறன்று அவர்களை இப்பணியில் உற்சாகப்படுத்துவதாகக் கூறினார் பாப்பிறை.