ஏப்ரல்23,2010 திருத்தந்தையின் தூரின் நகருக்கானத் திருப்பயணம் அண்மித்து வரும் வேளை,
விசுவாசிகள் நவநாள் செபங்கள் மூலம் அப்பயணத்திற்காகச் செபிக்குமாறு தூரின் கர்தினால்
Severino Poletto கேட்டுக் கொண்டார்.
வட இத்தாலியிலுள்ள தூரின் நகர் பேராலயத்தில்
பாதுகாக்கப்பட்டு வரும் இயேசுவின் இறந்த உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் சவத்துணியைப்
பார்வையிடுவதற்காகத் திருத்தந்தை வருகிற மே 2ம் தேதி அங்கு செல்லவிருப்பதன் ஆன்மீக அடித்தளத்தைக்
கோடிட்டுக் காட்டியுள்ளார் கர்தினால் பொலேத்தோ.
ஏப்ரல் 23ம் தேதி இவ்வெள்ளி முதல்
மே ஒன்றாந் தேதி வரை இந்நவநாள் செபங்களைச் செபிக்குமாறு கேட்டுள்ளார் தூரின் கர்தினால்
பொலேத்தோ.
இந்தப் புனிதச் சவத்துணியைப் பார்வையிடும் திருப்பயணிகள் அதன் ஆன்மீக
நலன்களைத் தங்களுக்கும் தங்களின் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பெற்றுச் செல்வார்கள்
என்ற தனது நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
இந்தப் புனிதத்துணி திறந்து வைக்கப்பட்ட
ஏப்ரல் 10ம் தேதியையடுத்த முதல் வாரத்தில் இருபதாயிரம் பேர் பார்வையிட்டனர். இது வருகிற
மே 23ம் தேதி வரை திறந்து வைக்கப்படும். 16 இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் இதனைப்
பார்வையிட முன்பதிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு திருத்தந்தை
இரண்டாம் ஜான் பவுல் இதனைப் பார்வையிட்டார். 2000மாம் ஜூபிலி ஆண்டிலும் இத்துணி பொது
மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.