2010-04-20 15:49:10

கர்தினால் Tomáš Špidlík ம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலும் ஒரேமாதிரியான ஆன்மீகத்தைக் கொண்டிருந்தவர்கள் - திருத்தந்தை


ஏப்ரல்20,2010 கர்தினால் Tomáš Špidlík ம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலும் ஒரேமாதிரியான ஆன்மீகத்தைக் கொண்டிருந்தவர்கள், இளமைக் காலங்களிலும் ஒரே மாதிரியான துன்பங்களை எதிர்கொண்டவர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை உரோமையில் இறந்த, 91 வயதாகும் இயேசு சபை கர்தினால் Špidlík ன் அடக்கச் சடங்கு திருப்பலியை இச்செவ்வாய் காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் கர்தினால்கள் குழு தலைவராகிய கர்தினால் ஆஞ்சலோ சொதானோ நிகழ்த்தினார்.

இத்திருப்பலியின் இறுதியில் பசிலிக்கா வந்து இறந்த கர்தினால் Špidlík குறித்து பேசிய திருத்தந்தை, வாழ்க்கை முழுவதும் இயேசுவின் திருவுளத்தைத் தேடினேன், அவரிடம் இப்பொழுது நான் செல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று இறந்த கர்தினால் குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்தே விளக்கினார்.

செக் குடியரசைச் சேர்ந்த கர்தினால் Špidlík, வாழ்க்கை முழுவதும் இறைவனின் திருச்சித்தப்படி நடப்பதற்கு முயற்சித்தவர் என்றும் முழு இதயத்தோடு என்ற அவரின் விருதுவாக்கின்படி வாழ்ந்தவர் என்றும் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.