2010-04-16 16:27:13

தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இடம்பெறுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்


ஏப்ரல்16,2010 கருவுற்ற காலம் மற்றும் குழந்தை பிறப்பின் போது ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் இறப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் திட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இடம்பெறுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

தாய்மைப்பேறு தொடர்புடைய இறப்புக்களைத் தடுக்க முடியும் என்ற நிலை இருந்தும்கூட இந்த 21ம் நூற்றாண்டில் நூறாயிரக்கணக்கான தாய்மார் இறப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று மூன் தெரிவித்தார்.

தாய்மைப்பேறு தொடர்புடைய இறப்புக்கள் ஆண்டுக்கு சுமார் ஐந்து இலட்சம் வீதம் இடம் பெறுவதாக உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.

இதற்கிடையே, கருக்கலைப்பு செய்யும் பெண்கள் அதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று வாழ்வுக்கு ஆதரவு நடவடிக்கையாளர் Carolina Beauregard கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.