உரோமையில் நடைபெறும் உலக குருக்கள் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்துக்
குருக்களும் அழைப்பு
ஏப்ரல்16,2010 மனித சமுதாயத்திற்குத் பணி செய்வதற்குத் தாங்கள் தயாராக இருப்பதை வெளிக்காட்டும்
வண்ணம், உரோமையில் நடைபெறும் உலக குருக்கள் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்கு
அனைத்துக் குருக்களும் அழைக்கப்படுகிறார்கள் என்று கர்தினால் Cláudio Hummes கூறினார்.
உலக
குருக்கள் ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகின் அனைத்துக் குருக்களுக்கும் செய்தி அனுப்பியுள்ள,
திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Hummes, குருக்கள் அனைவருக்கும் திருத்தந்தை
விடுக்கும் இதயம்நிறைந்த இனிய அழைப்பிற்குப் பதில் சொல்லத் தயங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
வருகிற
ஜூன் 9 முதல் 11 வரை உரோமையில் இடம்பெறவிருக்கின்ற நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்கு
அனைத்துக் குருக்களுக்கும் திருத்தந்தை முன்வைத்துள்ள அழைப்பை தனது செய்தியில் சுட்டிக்
காட்டியுள்ளார் கர்தினால்.
இந்த நவீன உலகின் முன்பாக, வத்திக்கான் புனித பேதுரு
வளாகத்தைப் பெருமளவான குருக்கள் நிறைந்திருப்பது, தாங்கள் இவ்வுலகைத் தீர்ப்பிட அல்ல,
மீட்க வந்தவர்கள் என்பதை அறிவிப்பதாக இருக்கும் என்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.