2010-04-14 15:02:42

நேபாளத்திற்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் உலக சமுதாயத்திற்கு வேண்டுகோள்


ஏப்ரல்14,2010 நேபாள நாடு புதிய அரசியலமைப்பை அறிவிப்பதற்கும் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் முயற்சித்து வரும் இவ்வேளையில், அந்நாட்டிற்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இப்புதன் முதல் வருகிற மே 23ம் தேதி வரை நாற்பது நாள்களுக்கு உலக அளவில் சிறப்பான செபங்கள் செபிக்கப்படும் என்று கத்தோலிக்கர் உட்பட பல பிரிந்த கிறிஸ்தவ சபைப் போதகர்கள் அறிவித்துள்ளனர்.

நேபாளத்தில் வருகிற மே 28ம் தேதிக்குள் புதிய தேசிய அரசியல் அமைப்பு குறித்த வரைவு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு அந்நாட்டிற்காகச் செபிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேபாளத்தின் ஏறத்தாழ 2 கோடியே 85 இலட்சம் மக்களுள் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் இந்துக்கள். அடுத்து புத்த மதத்தினர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். மேலும், அந்நாட்டில் வாழும் சுமார் 15 இலட்சம் கிறிஸ்தவர்களில் 7,500 பேர் கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.