2010-04-12 15:08:28

போஸ்னிய கத்தோலிக்க ராணுவ வீரர்களுக்கு ஆன்மீகப் பணிகளை வழங்க வழிவகுக்கும் ஒப்பந்தம்


ஏப்ரல்12,2010 போஸ்னியா நாட்டு ராணுவத்தில் பணிபுரியும் கத்தோலிக்கர்களுக்கு மதரீதியான ஆன்மீக உதவிகளை வழங்க வழிவகுக்கும் ஒப்பந்தம் திருப்பீடத்திற்கும் அந்நாட்டிற்கும் இடையே அண்மையில் கையெழுத்தாகியுள்ளது.
போஸ்னிய தலைநகர் சரயேவோவில் திருப்பீடத்தின் சார்பில் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் அலெசாந்த்ரோ தி எரிக்கோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செல்மோ சிக்கோத்திக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.2006ம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்குமிடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கியப் படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ராணுவ வீரர்களுக்கு ஆன்மீகப்பணிகளை ஆற்ற இப்புதிய ஒப்பந்தம் தலத் திருச்சபைக்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது.







All the contents on this site are copyrighted ©.