2010-04-12 15:30:15

ஏப்ரல் 13 நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
இரண்டு போராட்டக்காரர்கள் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார், டேய் காரை மெதுவாக ஓட்டு, ஏனெனில் என் கையிலிருக்கும் வெடி குண்டு திடீரென வெடித்துவிடலாம் என்று. அதற்கு வாகனத்தை ஓட்டியவர் சொன்னார்- அது பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே. ஏனெனில் வாகனத்தின் பின்புறம் உள்ள பெட்டியில் மற்றொரு வெடிகுண்டு இருக்கிறது என்று.
அன்பர்களே, பல நேரங்களில் நாம் செய்கின்ற செயல்களில் காட்டும் ஆர்வத்தினால், என்ன காரணத்திற்காக அவற்றைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கவனித்துச் செயல்படத் தவறி விடுகிறோம். அறிவு இல்லாத ஆர்வம் வெளிச்சம் இல்லாத நெருப்பு என்றார் தாமஸ் புல்லர்.







All the contents on this site are copyrighted ©.