2010-04-10 12:48:02

திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்த திரைப்படத்திற்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட்டின் பாராட்டு


ஏப்ரல்10,2010 விசுவாசம், பிறரன்பு மற்றும் நம்பிக்கையின் மனிதராகிய திருத்தந்தை 12ம் பத்திநாதரைக் குறித்து வரலாற்றில் நன்முறையில் பதிவுச் செய்யும் முயற்சி குறித்து தான் மகிழ்வதாகக் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பதவியிலிருந்த போது நாத்ஸி வதைப்போர் நடவடிக்கைகளுக்கு எதிராக எதுவும் ஆற்றவில்லை என தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் குறித்துப் பேசிய போது இவ்வாறு குறிப்பிட்டார் பாப்பிறை. கடந்த நூற்றாண்டுப் பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் வ்ரலாறு குறித்த இப்படம், பிறரன்பின் தந்தையாகிய திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து இக்கால இளைஞர்கள் தெரிந்துகொள்ள உதவும் என்ற நம்பிக்கையையும், இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பத் துறையினரைத் திருப்பீடத்தில் இவ்வெள்ளியன்று மாலை சந்தித்தபோது வெளிப்படுத்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.