இத்தாலியின் L’Aquila பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் முதல் ஆண்டு
நினைவாக அம்மக்களுக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினார் திருத்தந்தை
ஏப்ரல்07,2010 உயிர்த்த இயேசுவின் பேரில் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் என்ற பாறையின்
மேல் தனிமனித, சமுதாய மறு கட்டமைப்புப் பணிகள் நடைபெற வேண்டும் என திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்
கூறினார். இத்தாலியின் L’Aquila பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 6 ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
முதல் ஆண்டு நினைவாக இச்செவ்வாயன்று அப்பகுதி மக்களுக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பிய
திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார். திருப்பீடச் செயலர் Tarcisio Bertone கையொப்பமிட்டு
அனுப்பியுள்ள திருத்தந்தையின் செய்தி, சென்ற ஆண்டு இந்தத் துயர நிகழ்வைச் சந்தித்த அப்பகுதி
மக்களுக்கு இச்செவ்வாயன்று Collemaggio பேராலயத்தில் நிகழ்ந்த சிறப்புத் திருப்பலி முடிந்த
பின் வாசிக்கப்பட்டது.இப்பகுதி மக்களை தேவதாயும் புனிதர்களும் காப்பாற்ற வேண்டும் என்ற
தன் சிறப்பு செபங்களையும் திருத்தந்தை இந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.