2010-04-06 16:26:03

பாலின தகாத உறவுகளில் ஈடுபடும் குருக்களைத் தலத் திருச்சபை எள்ளளவும் சகித்துக் கொள்ளாது - Mexico நகர பேராயர்


ஏப்ரல்06,2010 பாலின தகாத உறவுகளில் ஈடுபடும் தன் பெருமறைமாவட்ட குருக்களைத் தலத் திருச்சபை எள்ளளவும் சகித்துக் கொள்ளாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்காது என எச்சரித்துள்ளார் Mexico நகர பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera.
தகாத பாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் கைகளில் முழுமையாக ஒப்படைக்கப்படுவார்கள் என்றார் அவர். திருச்சபை மீதான அண்மைக் குற்றச் சாட்டுகள் கத்தோலிக்கத்தின் நம்பகத்தன்மை மீது சேற்றை வாரி வீசியுள்ளன எனவும் கவலையை வெளியிட்டார் கர்தினால்.சிறார்கள் மீது தகாத பாலின நடவடிக்கைகளை சில குருக்கள் மேற்கொண்டதன் மூலம் திருச்சபையின் பெயரையும், சக குருக்களின் கௌரவத்தையும், அச்சிறார்களின் வளமான வருங்கால வாழ்வையும், தங்கள் குருத்துவ புனிதத்துவத்தையும் குழி தோண்டி புதைத்துள்ளனர் எனவும் கண்டனத்தை வெளியிட்டார் Mexico கர்தினால் Rivera.







All the contents on this site are copyrighted ©.