2010-04-06 16:25:26

சிலி நாட்டில் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone


ஏப்ரல்06,2010 சிலி ஆயர் பேரவை மற்றும் அரசின் அழைப்பின் பேரில், அந்நாட்டில் அண்மைய நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.
சிலி நாடு குடியரசானதன் 200வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டியும் இச்செவ்வாய் முதல் அடுத்த புதன் வரை ஒன்பது நாட்களுக்கு இடம் பெறும் திருப்பீடச் செயலரின் பயணத் திட்டத்தில், அரசுத் தலைவர், இளைய சமுதாயத்தினர் ஆகியோரைச் சந்தித்து, அந்நாட்டின் பல்வேறு திருத்தலங்கள், நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகியவைகளைப் பார்வையிடுவதுடன், பேராலயங்களில் திருப்பலிகளையும் நிறைவேற்றுவார்.சிலி குடியரசானதன் 200ஆம் ஆண்டையொட்டி, திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் தனிப்பட்ட முறையில் அந்நாட்டிற்கென ஆசீர்வதித்த Carmen வேதபோதாக கன்னிமரியின் திரு உருவத்தையும் அந்நாட்டிற்கு திருத்தந்தையின் சார்பில் வழங்குவார் திருப்பீடச் செயலர் கர்தினால் Bertone







All the contents on this site are copyrighted ©.