சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 114 பேர் மீட்கப்பட்டது உண்மையிலேயே ஒரு ‘அற்புதம்’
எனப்படுகிறது
ஏப்ரல்05,2010 இது ஒரு அற்புத செயல் தான். இன்னும் இது போன்ற அற்புதங்கள் ஏற்படும் என்று
நம்புவோம் என்று Liu Dezheng கூறினார். மார்ச் 28ஆம் தேதி சீனாவின் Xiangning பகுதியில்
சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 153 பேர் சிக்கிக் கொண்டனர் என்றும், அவர்களை மீட்கும்
பணிகள் தீவிரமடைந்தாலும், அவர்களை உயிரோடு மீட்கும் நம்பிக்கை குறைந்து வந்த வேளையில்,
இத்திங்கள் அதிகாலை அவர்களில் 114 பேர் ஒரு சேர மீட்கப்பட்டது உண்மையிலேயே ஒரு அற்புதம்
என மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பாதுகாப்பு
விதிமுறைகளை மீறி, சீனாவில் நடைபெறும் பல சுரங்கத் தொழில்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி
உள்ளனர் என்றும், 2002 ஆம் ஆண்டு மட்டும் அந்த நாட்டில் சுரங்கங்களில் நடந்த விபத்துக்களில்
ஏறத்தாழ 7000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.