2010-04-05 15:38:02

ஆப்கானிஸ்தானில் செய்யப்பட்டு வரும் பணிகள் தொடரும் - இயேசு சபையினர்


ஏப்ரல்05,2010 ஆப்கானிஸ்தானில் செய்யப்பட்டு வரும் பணிகளை குறைத்துக் கொள்வதென்று இந்திய அரசு தீர்மானம் செய்தாலும், அந்நாட்டில் தங்களது பணிகளைத் தொடரப் போவதாக இயேசு சபையினர் கூறியுள்ளனர்.
இந்த நாட்டினருக்கு தங்கள் பணிகள் உண்டு என்ற வாக்குறுதியிலிருந்து தாங்கள் பின்னடையப் போவதில்லை என்று ஆப்கானிஸ்தானில் பணி புரியும் அருட்தந்தை James Kalapura கூறினார்.
அண்மையில் இந்திய அரசின் அலுவலகங்களிலும் அங்கு பணி புரியும் அதிகாரிகள் மேலும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுகளால் தங்கள் முடிவுகளில் மாற்றம் இருக்காது என்றும் அங்கு தற்போது பணி புரியும் இயேசு சபையினர் தொடர்ந்து அங்கு பணி செய்வதையே விரும்புகின்றனர் என்றும் தென் ஆசிய இயேசு சபையினரின் தலைவர் அருட்தந்தை Edward Mudavassery கூறினார்.தாங்கள் பணி புரியும் பகுதியான Heratல் இதுவரை பாதுகாப்பு சார்ந்த ஆபத்துக்கள் எழவில்லை என்றாலும், பொதுவாகவே ஆப்கானிஸ்தானில் பணி புரிவது பெரும் சவால் என்று அருட்தந்தை Kalapura கூறினார்.







All the contents on this site are copyrighted ©.