பாகிஸ்தானில் கத்தோலிக்கர் கடவுள் மீதான விசுவாசத்தில் தளராமல் வாழுமாறு ஆயர்கள் வேண்டுகோள்
மார்ச்30,2010 பாகிஸ்தானில் காணப்படும் போர் போன்ற நிலைகளுக்கு மத்தியில் கத்தோலிக்கர்
கடவுள் மீதான தங்களது விசுவாசத்தில் தளராமல் வாழுமாறு அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிறிஸ்துவின்
உயிர்ப்பைக் கொண்டாடவிருக்கின்ற நாம், கவலையும் அச்சமும் நிறைந்த சூழலில் வாழும் மக்களுக்கு
எவ்வாறு நற்செய்தியாக மாற முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று லாகூர் உயர்மறைமாவட்ட
துணை ஆயர் செபஸ்டியான் ஷா வலியுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை, தற்கொலை தாக்குதல்கள்
அடிப்படை பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் மத்தியில் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில்
பாதுகாப்பற்றும் பயத்துடனும் இருக்கின்றனர் என்றுரைக்கும் ஆயரின் செய்தி, இம்மக்களுக்குக்
கிறிஸ்தவர்கள் நற்செய்தியாக வாழுமாறு அழைப்பு விடுக்கிறது.
மேலும், லாகூர் பேராயர்
இலாரன்ஸ் சல்தான்ஹா தனது உயிர்ப்பு விழாச் செய்தியில், இருளும் இன்னலும் நிறைந்த கஷ்டமான
காலத்தில் வாழும் மக்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு நம்பிக்கையையும் அன்பையும் கொண்டு வருகிறது
என்று குறிப்பிட்டுள்ளார்.