மார்ச்29,2010 கிறிஸ்தவனாக இருப்பது என்பது இயேசு கிறிஸ்து நமக்குக் காட்டிய மற்றும்
காட்டிக் கொண்டிருக்கும் பாதையில் அவரோடு இணைந்து திருப்பயணம் மேற்கொள்வதாகும் என, குருத்து
ஞாயிறு விழாவில் மறையுரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். திருச்சபையின்
மக்கள் அனைவரும் ஒரே கயிற்றால் பிணைக்கப்பட்டவர்களாய், திருச்சபையுடனான ஐக்கியத்துடன்
ஒன்றிணைந்து இறைவனை நோக்கிச் செல்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்த பாப்பிறை,
இறைவனின் மகிமையையும் அமைதியையும் மக்களிடையே கொணர, நம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் எனவும்
விண்ணப்பித்தார். திருச்சபையின் "நாம்" என்பதன் வழி, நாமனைவரும் இயேசு கிறிஸ்துவுடனான
ஐக்கியத்திற்குள் நுழைந்து, இறைவனின் வழிகளைச் சென்றடைகிறோம் என மேலும் கூறினார் பாப்பிறை.இறைவிருப்பம்
நிறைவுறும்போது இவ்வுலகமும் வானகமாக மாறும் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்துரைத்தார்.