2010-03-29 16:25:05

திருத்தந்தை அனுபவிக்கும் வேதனைகளில் ஒருமைப்பாட்டு உணர்வுடன் தாங்களும் பங்கு பெறுவதாக Focolare இயக்கம் திருப்பீடத்திற்கு அனுப்பியுள்ள கடிதம்


மார்ச்29,2010 சிறார்கள் சில குருக்களால் பாலின முறையில் தவறாக நடத்தப்பட்டது குறித்து திருத்தந்தை, திருச்சபை மற்றும் பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் வேதனைகளில் ஒருமைப்பாட்டு உணர்வுடன் தாங்களும் பங்கு பெறுவதாக Focolare இயக்கம் திருப்பீடத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
Focolare கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் Maria Voce அனுப்பியுள்ள கடிதத்தில், பாலின முறையில் தவறாக நடத்தப்பட்டவர்கள், அது குறித்து ஆழ்ந்த துயர்களை அனுபவித்து வரும் திருத்தந்தை, திருச்சபை என அனைவரின் துன்பங்களில் பங்கேடுப்பதாகக் கூறியுள்ளார்.
சில குருக்களின் தவறான நடவடிக்கைகளுக்காக சில பத்திரிகைத் துறையினரால் இன்று அவதூறாகத் தாக்கப்படும் திருத்தந்தையுடன் தங்கள் செப உறுதியையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளதாகக் கூறும் Maria Voce, திருத்தந்தையின் உறுதியான நிலைப்பாடுகளைத் தெளிவுடன் மக்களுக்கு எடுத்துரைக்க Focolare இயக்கம் துணை நிற்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார். தந்தையாம் இறைவன் மீதான நம் விசுவாசம், இத்துன்ப காலத்தை வெற்றி கண்டு, ஒரு புது உயிர்ப்புக்கு நம்மை இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார் அவர்.







All the contents on this site are copyrighted ©.