2010-03-24 14:34:11

மார்ச் 25 தவக்காலச்சிந்தனை


RealAudioMP3 இன்றைய தினம் நாம் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகிறோம். கலிலேயாவிலுள்ள நாசரேத்து எனும் சிற்றூரில் வாழ்ந்த மரியா எனும் சாதாரண பெண் கடவுளது தாயாக உயர்த்தப்பட்ட பெருநிகழ்வை இன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த மரியா என்னும் சாதாரண பெண் இப்படிப்பட்ட உயர்நிலை அடைய "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்னும் கீழ்ப்படிதல் வார்த்தையில் அடங்கியிருப்பதாக தூய அல்ஃபோன்சஸ் லிகோரி கூறுகிறார்.

இறைவனது திட்டத்திற்கு தன்னைக் கையளித்ததோடு அது முழுமையடைய, தன்னில் நிறைவேறி தன்னைக் கடந்து, மனிதகுலத்தைச் சென்றடைய என பல நிலைகளில் மரியா கடவுளது சொல் தன்னில் நிகழ வாழ்ந்து காட்டியதன் முதல் அடையாளமே இந்தக் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புப் பெருவிழா.

இதுவரை தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் தனது பதில், “அல்லேலூயா"; இனிமேல் தனது வாழ்வில் நிகழ இருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தனது ஒரே பதில் "ஆமென்" என்னும் சீடத்துவ வாழ்வை முழுமையாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் முதல் உண்மைச் சீடர் அன்னை மரியா என்பதை பறைசாற்றும் விழா தான் இன்றைய கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புப் பெருவிழா.

அன்னை மரியாவைப்போல இயேசுவின் சீடர்களாக நாமும் இன்றைய தினம் சொல்வோம், " நான் உமது அடிமை; உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்" என







All the contents on this site are copyrighted ©.