2010-03-24 15:05:25

பாகிஸ்தான், ராவல்பிண்டியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட Arshed Masih மருத்துவமனையில் இறந்தார்


மார்ச்24,2010 மார்ச் 19ஆம் தேதி பாகிஸ்தான், ராவல்பிண்டியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட Arshed Masih என்ற 38 வயதான கிறிஸ்துவர் இத்திங்கள் மாலை மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் இச்செவ்வாயன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்த மரணத்தை அடுத்து, பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் அரசு மிகவும் தாமதமாக செயல் படுவதாக பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அமைச்சரவையில் சிறுபான்மையினர் அமைச்சராக உள்ள Shahbaz Bhatti எனும் கத்தோலிக்கர், அரசின் தாமதங்களைப் பற்றி எதுவும் எடுத்துரைக்காமல் இருப்பது ஏமாற்றத்தைத் தருவதாக பாகிஸ்தான் கத்தோலிக்க நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் செயலர் Peter Jacob கூறினார். Arshed Masihம் அவரது மனைவியும் ராவல்பிண்டியில் உள்ள ஒரு இஸ்லாமிய செல்வந்தரிடம் பணி புரிந்து வந்தனர் என்றும், அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்தப்பட்டதை அவர்கள் எதிர்த்ததால், இச்சம்பவம் நடைபெற்றதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.