2010-03-23 14:56:51

புனித வியாழன் காணிக்கை நிதியை ஹெய்ட்டி குருமடம் கட்ட அனுப்பவுள்ளார் திருத்தந்தை.


மார்ச் 23. திருத்தந்தை வரும் வாரம் வியாழனன்று ரோம் நகரின் புனித ஜான் லாத்ரன் பசிலிக்காவில் நிறைவேற்றும் இறுதி இரவு உணவுத் திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கை நிதி ஹெய்ட்டி நாட்டிற்கு அனுப்பப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

புனித வியாழனன்று ரோம் நேரம் 5.30 மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றவுள்ள திருப்பலியில் திரட்டப்படும் காணிக்கை நிதி ஹெய்ட்டியின் குருமடத்தை மீண்டும் கட்டியெழுப்ப செலவழிக்கப்படும்.

ஜனவரி மாதம் ஹெய்ட்டியில் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 26 குருமடங்கள் அழிவுக்குள்ளாகியதும் போர்த் ஆவ் பிரின்ஸின் பேராயர் மரணம் அடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.