2010-03-23 14:58:52

பிரசில் நாட்டின் ஏழைக்கத்தோலிக்க குடும்பங்களுக்கென 10 இலட்சம் விவிலியப்பிரதிகள்


மார்ச் 23. பிரசில் நாட்டின் ஏழைக் கத்தோலிக்க குடும்பங்களுக்கென 10 இலட்சம் விவிலியப் பிரதிகளை இலவசமாக வழங்க உள்ளதாக அந்நாட்டு தலத்திருச்சபை அறிவித்துள்ளது.

ஒரு விவிலியம், ஒரு குழந்தைகள் விவிலியம், திருமறைக்கல்வி ஏடு, மற்றும் விவிலியத்தைப் படிப்பதற்கான வழிகாட்டுதல் ஏடு என நான்கு புத்தகங்கள் அடங்கிய பரிசாக ஒவ்வொரு ஏழைக்குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்றார் இப்பணியில் ஈடுபட்டுள்ள சோனியா மிந்தெர்.

விவிலியத்தை விலைகொடுத்து வாங்க முடியா நிலையிலிருக்கும் ஏழைக்குடும்பங்களை ஒவ்வொரு பங்குதளமும் அடையாளம் காட்டும் நிலையில், இவ்விவிலியப்பிரதிகள் பிரசில் ஆயர் பேரவையால் அம்மக்களுக்கு விநியோகிக்கப்படும் என மேலும் அறிவித்தார் அவர்.

10 இலட்சம் பிரதிகள் என்பது இப்போது முன்வைக்கப்பட்டுள்ள திட்டமே, ஆனால் அதற்கு மேலும் எண்ணிக்கையில் தேவை இருப்பின், அதுவும் ஆயர்களால் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார் மிந்தெர்.








All the contents on this site are copyrighted ©.