2010-03-23 14:57:07

கடந்த கால உண்மைகளை ஏற்று வருங்கால புதுப்பித்தலை நோக்கி நடைபோடுங்கள் என்கிறார் அயர்லாந்து பேராயர்.


மார்ச் 23. அயர்லாந்து தலத்திருச்சபை வேதனை நிறை கடந்த கால உண்மை நிலைகளை ஏற்றுக்கொண்டு வருங்காலம் நோக்கியப் பாதையில் புதுப்பித்தல் உணர்வுடன் நடைபோட வேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு Dublin பேராயர் Diarmuid Martin.

சில தலத்திருச்சபை அதிகாரிகளின் தவறான பாலின நடவடிக்கைகளால் வேதனைகளை அனுபவித்து வரும் அயர்லாந்து திருச்சபை, இந்நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து ஆழ்ந்த கவலையும் அக்கறையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார் அவர்.

தலத்திருச்சபை தன் குழந்தைகளின் நம்பிக்கைகளை வீணடித்ததுள்ளதுடன், சிறார்களை தவறான முறையில் நடத்தியது, அத்தவறுகளை தடுக்கத் தவறியது மற்றும் அக்குற்றங்களை மறைக்க முயன்றது ஆகியவைகள் மூலம் தவறிழைத்துள்ளது என்றார் பேராயர்.

தலத்திருச்சபைக்கான குணப்படுத்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான இந்நேரத்தில் அனைத்து விசுவாசிகளின் ஜெபத்திற்கும் அழைப்பு விடுத்தார் பேராயர் Diarmuid Martin.








All the contents on this site are copyrighted ©.