2010-03-16 14:54:42

கர்நாடக மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயேசு சபையின் உதவிகள்.


மார்ச் 16, 2010. 5மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணியை ப்ரிட்டன் பிறரன்பு அமைப்பு ஒன்றின் உதவியுடன் இன்னும் தொடர்ந்து ஆற்றி வருகிறது அம்மாநில இயேசு சபை.

ரெய்ச்சூர் மாவட்டத்தின் 29 கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேவையாற்றி வரும் இயேசுசபையினர், SPICMA என்ற பிறரன்பு அமைப்பின் உதவியுடன் அம்மக்களின் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கென ஏற்கனவே 48,000 டாலர்களைச் செலவழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் தலித் மக்களுக்கென தற்காலிக உறைவிடங்களையும் கட்டிக் கொடுத்து உதவியுள்ளது இயேசு சபை.








All the contents on this site are copyrighted ©.