பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவ சிறுமி முஸ்லீம் நபர் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு உயிரோடு
தீ வைக்கப்பட்டுள்ளாள்
மார்ச்13,2010 பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், கிரண் ஜார்ஜ் என்ற கிறிஸ்தவ சிறுமி
வீட்டு வேலை செய்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் எஜமானரின் மகனால் கற்பழிக்கப்பட்டு பின்னர்
உயிரோடு எரிக்கப்பட்டுள்ளாள் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
உடம்பில் 80
விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரண், இரண்டு நாட்களுக்குப்
பின்னர் இறந்துள்ளாள்.
இதே போன்று, லாகூரில் செல்வாக்குமிக்க வழக்கறிஞர் ஒருவரால்,
Shazia Bashir என்ற 12 வயது கிறிஸ்தவ சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாள். ஆயினும்
அந்தக் குற்றவாளி இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.