2010-03-13 14:47:51

சீனாவில் 300 மாணவர்க்கு பயிற்சி அளித்த அருள்பணியாளர் கைது


மார்ச்13,2010 சீனாவில் 300 பல்கலைகழக மாணவர்க்கு பயிற்சி பாசறை நடத்தியதற்காக அந்நாட்டு அருட்பணியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளது சீன அரசு.

வத்திக்கானுக்கு விசுவாசமாக இருக்கும் 39 வயதான அருட்பணி John Baptist Luo மற்றும் 6 குருக்கள் சேர்நது 300 மாணவர்க்கு நான்கு நாட்கள் பயிற்சி பாசறைகளை நடத்தினர்.

இதில் குரு லுவோ கைது செய்யப்பட்டுள்ளார் மற்ற குருக்களுக்கு 500 யுவான் பணம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீன அரசு அந்நாட்டில் அரசு சாரா நிறுவனங்கள் நன்கொடைகள் பெறுவதைக் கட்டுப்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் அரசு சாரா மற்றும் சமய நிறுவனங்கள் 1,50,000 டாலர் பெறுமான நன்கொடைகள் பெறுவதற்கு அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

எனினும் அரசின் தற்போதைய திட்டம் தங்களின் பணிகளைப் பாதிக்கும் என்று அந்நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.