மார்ச்11,2010 அன்பர்களே, கடந்த வாரத்தில் சென்னையில் கத்தோலிக்க ஆயர்கள், அருட்பணியாளர்கள்,
அருட்சகோதரிகள், பொதுநிலையினர் என ஆயிரக்கணக்கானோர் தலித் கிறிஸ்தவர்க்கு உரிமை கோரி
பேரணியில் ஈடுபட்டனர். அச்சமயம் ஆயர்கள் உட்பட பலர் நான்கு மணிநேரம் தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த உரிமைப் போராட்டம் குறித்து அறிவதற்கு
அ.பணி.தேவ சகாயராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். இவர் தமிழக ஆயர் பேரவையின்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் செயலர்.