மலேசியாவில் வீடுகளில் பணிபுரியும் இந்தோனேசிய பணியாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தர
மலேசிய தலத்திருச்சபை போராட்டம்
மார்ச்09,2010 மலேசியாவில் வீடுகளில் பணிபுரியும் இந்தோனேசிய பணியாளர்களின் அடிப்படை
உரிமைகளைப் பெற்றுத்தர அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தைத் துவக்கியுள்ளது
மலேசிய தலத்திருச்சபை.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதிப்பாடு,
சட்டப்பாதுகாப்பு, வாரத்தில் ஒருநாள் விடுமுறை போன்றவைகள் வழங்கப்பட வேண்டுமென அழைப்பு
விடுத்தத் தலத்திருச்சபையின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவையின் தலைவர் ஜொவாக்கிம்
பிரான்சிஸ் சேவியர், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப்
பொறுத்து பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகக் கவலையை வெளியிட்டார்.
ஹூயுமன் ரைட்ஸ்
வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, மலேசியாவில் 3 இலட்சம் வெளிநாட்டு
வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர், அதில் பெரும்பான்மையினோர் இந்தோனேசியாசியாவைச் சேர்ந்தவர்கள்.