2010-03-09 15:57:26

ஜார்ஜிய மக்கள் உலகாயுத போக்குகளால் விசுவாசத்தை இழக்கும் ஆபத்தில் இருப்பதாகக் ஆயர் கவலை


மார்ச்09,2010 சோவியத் ஆட்சியின்கீழும் தங்கள் விசுவாசத்தைக் கட்டிக்காத்த ஜார்ஜியா நாட்டு மக்கள் உலகாயுத போக்குகளாலும் பொருட்களே பெரிதென எண்ணும் மனநிலைகளாலும் அவ்விசுவாசத்தை இழக்கும் ஆபத்து இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

இன்றைய ஜார்ஜியாவில் பன்வலைத்தளம் மற்றும் சமூகத்தொடர்பு நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக உலகாயுதப் போக்குகள் பெருகி வருவதாக உரைத்த ஆயர் ஜூசப்பே பசோத்தோ, இத்தகைய தொழிட்நுட்பங்கள் விஷம்போல் இளைய சமுதாயத்தைப் பாதித்து பொருட்களே பெரிதென எண்ணும் மனநிலைக்கு இளைஞர்களைத் தள்ளி வருகின்றன என்றார்.

கிறிஸ்தவப் படிப்பினைகளை மீண்டும் வழங்க நல்லதொரு சூழலை இளைஞர்களிடையே உருவாக்கத் தலத்திருச்சபை திட்டமிட்டுள்ளதாகவும் ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.