பொதுநிலை விசுவாசிகள் திருச்சபையில் உடன் பொறுப்பைக் கொண்டிருப்பவர்கள் : திருத்தந்தை
மார்ச்08,2010 திருச்சபையில் பொதுநிலை விசுவாசிகள் குருக்களோடு ஒத்துழைப்பவர்கள் அல்ல,
மாறாக அவர்கள் திருச்சபையில் உடன் பொறுப்பைக் கொண்டிருப்பவர்கள் என்று திருத்தந்தை கூறினார்.
இஞ்ஞாயிறு காலை, உரோம் மறைமாவட்டத்தின் புனித சிலுவை அருளப்பர் பங்குக்குச் சென்று
திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, புதிய பக்த இயக்கங்களும், சமூகங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைப்
பாராட்டினார்.
விசுவாசிகள், நற்செய்தி அறிவிப்பில் புதிய வழி முறைகளை அனுபவிக்கவும்,
திருச்சபை குறித்த பரந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்