மார்ச்05,2010 இலங்கையில் இடம் பெற்ற நீண்டகால போருக்குப் பின்னர் முதற்தடவையாக மன்னார்
மறைமாவட்டத்தில் தவக்கால பாத யாத்திரை நடத்துவதற்கு அம்மறைமாவட்டம் திட்டமிட்டுள்ளது.
இம்மாதம்
10ம் தேதி, மன்னாரிலிருந்து வவுனியா மாவட்டத்தின் Komarasankulum லுள்ள “கல்வாரி” வரை
97 கிலோ மீட்டர் பாத யாத்திரை தொடங்கும் என்று மன்னார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி
விக்டர் சூசை கூறினார்.
இந்த மூன்று நாள் யாத்திரை தொடங்கு முன்னர் மக்கள் அவரவர்
பங்குகளில் செபம் மற்றும் நோன்பு அனுசரிப்பார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்