2010-03-04 15:09:50

இளையோருக்கான பணிகளுக்கு இன்னும் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று இந்திய ஆயர்கள் பேரவை தீர்மானம்


மார்ச்04,2010 இந்தியாவில் இளையோருக்கான பணிகளுக்கு இன்னும் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று இந்திய ஆயர்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இப்புதனன்று குவஹாத்தியில் நிறைவு பெற்ற இந்திய ஆயர் பேரவையின் நிறைவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களில், இளையோரின் பணிகளுக்கென பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த பத்து நாட்களாய் குவஹாத்தியில் நடைபெற்ற இந்த பேரவைக் கூட்டத்தில் முதல் மூன்று நாட்கள் 50க்கும் மேற்பட்ட இளையோரும், அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளோரும் கலந்து கொண்டனர்.
இளையோர் கூறிய கருத்துக்களுக்குத் தாங்கள் ஆர்வமாய் செவிசாய்த்ததாகவும், திருச்சபையின் நிர்வாகம் பொறுத்த பல விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இளையோர் கொண்டுள்ள விசுவாச வாழ்வும், சாட்சிய வாழ்வும் தங்களைக் கவர்ந்ததாகவும் ஆயர்கள் தங்கள் இறுதி அறிக்கையில் கூறியுள்ளனர்.வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் இளையோருக்கென சிறப்பான பணிகளை உருவாக்க வேண்டுமென்றும், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளையோர் பணிக்கென ஒருவரை தனிப்பட்ட வகையில் நியமிக்க வேண்டுமென்றும் ஆயர்கள் தீர்மானங்கள் எடுத்துள்ளனர் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.