பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு ஈராக் கிறிஸ்தவர்களுக்காக ஐ,நா.வில் விண்ணப்பம்
மார்ச்02,2010 ஜெனீவாவின் மனித உரிமைகள் அவையின் 13வது கூட்டத்தொடரில் பாகிஸ்தானில் இடம்
பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை ஒன்றை பாக்ஸ் கிறிஸ்டி
அமைப்பு சமர்ப்பித்துள்ளது.
ஈராக்கில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள்
அங்கிருந்து முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவ்வறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள
இவ்வமைப்பு, ஈராக் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும்
தெரிவித்துள்ளது.