தென் இத்தாலியில் மாஃபியா அமைப்புமுறை குற்றங்கள் நிறுத்தப்படுவதற்கு ஆயர்கள் அழைப்பு
பிப்.26,2010 தென் இத்தாலியில் இடம் பெறும் திட்டமிட்ட அமைப்புமுறையான குற்றங்கள் நிறுத்தப்படுவதற்கு
அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இத்தாலிய திருச்சபையும் தென் இத்தாலியும்
என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், இந்த மாஃபியா அமைப்புமுறைக் குற்றங்கள்
மீது கவனம் செலுத்தப்பட்டு அவை களையப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.மாஃபியாக்கள்,
சமூக வாழ்வை நச்சுப்படுத்துகின்றனர், பல இளையோரின் எண்ணத்தையும் மனத்தையும் திசை திருப்புகின்றனர்
மற்றும் தென்பகுதியின் உண்மையான முகத்தைக் குலைக்கின்றனர் என்றும் ஆயர்களின் அறிக்கை
கூறுகிறது.