இலங்கை காரித்தாஸ் அமைப்பின் தவக்கால நீதி மற்றும் ஒப்புரவுக்கான நடவடிக்கைகள்
பிப்.25,2010 அன்பர்களே, அருட்பணி. ஜார்ஜ் சிகாமணி இலங்கை தேசிய காரித்தாஸ் அமைப்பின்
புதிய இயக்குனர். இலங்கை காரித்தாஸ் அமைப்பும் அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும்
அமைதி ஆணையமும் இணைந்து நாட்டில் ஒப்புரவு ஏற்படுவதற்கு இத்தவக்காலத்தில் சிறப்பு முயற்சிகளை
எடுத்துள்ளன. அம்முயற்சி பற்றி அறிவதற்கு, அருட்பணி. ஜார்ஜ் சிகாமணி அவர்களைத் தொலை பேசியில்
தொடர்பு கொண்டோம்.