தவக்காலச்
சிந்தனையை வழங்குபவர் அருட்பணி. பவுல்ராஜ், சே.ச. யோனாவை விட அனைத்து தளங்களிலும்
பெரியவரான இயேசு கிறிஸ்து யோனாவின் அரும் அடையாளத்தையே இன்று நமக்கு முன்னிறுத்துகிறார்.
யோனாவின் அடையாளம் இந்தத் தவக்காலத்தில் நமக்குச் சொல்ல விரும்புவதென்ன? யோனாவின் அடையாளத்தில்
நான் யாராக இருக்கிறேன்?
தந்தையாகிய கடவுளின் பணியிலிருந்து தப்பித்து
ஓட நினைத்த யோனாவைப் போல நான் இருக்கிறேனா? கடவுளது திருவுளத்தை நிறைவேற்றுவதற்குப்
பதிலாக தனது விருப்பு, வெறுப்பை முன்னிறுத்தி நியாயப்படுத்தும் யோனாவாக எனது வாழ்வில்
நான் திட்டங்கள் தீட்டுகிறேனா? மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் கடவுளால் தடுத்தாட்கொள்ளப்பட்ட
யோனாவைப் போல நான் மாற என்னை இறைவனின் திருக்கரங்களில் தயக்கமின்றி இத்தவக்காலத்தில்
கையளிக்கும் நிலையில் நான் உள்ளேனா? நினிவே மக்களைப் போல இறைவனின் வார்த்தையால் நான்
மனம் மாறத் தயாராக இருக்கிறேனா? நோன்பும், சாம்பலும், சாக்கு உடையும் எனக்கு எவையாக
இருக்கின்றன? யோனா இறைவார்த்தையைப் போதித்து வாழ்ந்து காட்டியது போல நான் எனது சூழலில்
யாரைப் போதித்து வாழ்ந்து காட்டுகிறேன்? நினிவே எனக்கு எங்கே இருக்கிறது? இறைவனிடம்
இத்தவக்காலத்தில் நெருங்கி வர எனக்குள் தடையாக இருப்பவை தான் என்னென்ன?
யோனாவின்
அரும் அடையாளத்தை விட மேலான இயேசு நம்மில் கருவாகி உருவாகி மலர்ந்திட நம்மையே சிறிது
புடமிட்டு பார்க்கலாமே!