பிப்.22,2010 தவக்காலத்தின் அர்த்தமும் அதை வாழும் முறைகளும் குறித்து தெரியாதவர்கள்
திருத்தந்தையின் செயல்பாடுகளைக் கண்டு அதனைக் கற்றுக் கொள்ளலாம் என்றார் திருப்பீடப்
பேச்சாளர் குரு Federico Lombardi. ஒரு வாரத்திற்கு முன்னர் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் ரோம் நகரின் காரித்தாஸ் அமைப்பு
நடத்தும் பிறரன்பு மையத்திற்குச் சென்று, அங்கு தங்கியிருப்போரைச் சந்தித்து ஆறுதல் கூறியதைச்
சுட்டிக் காட்டிய இயேசுசபை குரு Lombardi, அதன்பின் திருப்பீடத்தில் அயர்லாந்து ஆயர்களை இருநாள் சந்தித்து மனமாற்றம்,
ஒறுத்தல், திருச்சபையின் புதுப்பித்தலுக்கான செபம் போன்றவைகளுக்கு அழைப்பு விடுத்ததையும் எடுத்துக்
காட்டினார்.கடந்த வாரம் திருநீற்று புதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின், வியாழனன்று
குருக்களோடு இணைந்து விவிலியப் பகுதிகளுடன் தியானித்ததையும் சுட்டிக்காட்டிய திருப்பீடப் பேச்சாளர்,
ஜெபம், இறைவார்த்தைக்கு செவிமடுத்தல், மனமாற்றமும் ஒறுத்தலும், பிறரன்பின் நடவடிக்கைகள் போன்றவை இத்தவக்காலத்திற்கான திருத்தந்தை
காட்டும் வழிகள் என்றார்.