மெக்சிகோவில் அருட்பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிப்.20,2010 மெக்சிகோவில் 49 வயதாகும் அருட்பணியாளர் José Luis Parra Puerto வழிப்பறித்
திருடர்களால் கொல்லப்பட்டுள்ளார். ஆலயப் பணியாளர் ஒருவரை தனது வாகனத்தில் அழைத்துச்
சென்ற போது அவரது வாகனத்தைத் திருடிய கொள்ளையர்கள் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும்,
மெக்சிகோவில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஓரினப்பாலினச் சேர்க்கை திருமணங்கள் மற்றும்
அத்திருமணங்களைச் செய்தோர் பிள்ளைகளைத் தத்து எடுக்க அனுமதிக்கும் சட்டத்தை இரத்து செய்யும்
நோக்கத்தில் திருச்சபை மற்றும் பொது நல அமைப்புகள் ஐம்பதாயிரம் கையெழுத்துக்களைச் சேகரிப்பதற்கு
முனைந்துள்ளன.0.5 வாக்காளர்கள் கையெழுத்துப் போட்ட மனு இருந்தால் அது சட்டசபையில் சமர்ப்பிக்கப்படலாம்
என்று மெக்சிகோ நகர சட்டம் கூறுகிறது.