திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோமை லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்திற்கு வருகிற மார்ச்
14ம் தேதி செல்வார்
பிப்.19,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோமையிலுள்ள லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்திற்கு
வருகிற மார்ச் 14ம் தேதி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட கிறிஸ்தவ
ஒன்றிப்பு அவையும் வத்திக்கான் பத்திரிகை அலுவலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,
மார்ச் 14ம் தேதி லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் நடைபெறும் ஜெர்மன் மொழியிலான திருவழிபாட்டில்
திருத்தந்தையும் லூத்தரன் சபை போதகரும் மறையுரைகள் வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருப்பீட
கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவரான கர்தினால் வால்ட்டர் காஸ்பரும் திருத்தந்தையின் இத்திருப்பயணத்தில்
கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பிறை இரண்டாம் ஜான் பால், இந்தக்
கிறிஸ்தவ சபை ஆலயத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் 25ம் ஆண்டின் நினைவாக, உரோம் லூத்தரன்
கிறிஸ்தவ சமூகம்,2008ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
லூத்தரன்
சபையைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் பிறந்ததன் 550ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பாப்பிறை
இரண்டாம் ஜான் பால், உரோம் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்திற்கு 1983ம் ஆண்டில் திருப்பயணம்
மேற்கொண்டார்.