2010-02-19 14:33:23

உலக சமூக நீதி நாள்-ஐ.நா.பொதுச் செயலர்


பிப்.19,2010 உலகில் எந்த இடத்தில் சமூகநீதி காக்கப்படாமல் இருந்தாலும் அது நம் அனைவருக்குமான இகழ்ச்சியாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

பிப்ரவரி 20ம் தேதி, இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் உலக சமூக நீதி நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள மூன், சமூக நீதி என்பது, சமத்துவம், நீதி, பன்மைத்தன்மையை மதித்தல், சமூகப் பாதுகாப்புக்கு வழி அமைத்தல், பணியிடங்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் மனித உரிமைகள் மதிக்கப்படல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் சமூகநீதி திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கருவிகளாக, மில்லேனேய வளர்ச்சித்திட்ட இலக்குகள் அமைந்துள்ளன என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.