பிப்.17,2010 இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி Sarath Fonseca கைது செய்யப் பட்டதைக்
குறித்தும், அதைத் தொடர்ந்து இலங்கையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்தும் அந்நாட்டின் அனைத்து மதங்களின் குழு தன் கவலையை வெளியிட்டுள்ளது. விடுதலைப்
புலிகளுடனான இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த படைத் தளபதி Fonseca வைக்
கைது செய்துள்ளது அனைத்து இலங்கை மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதென இம்மதங்களின் குழு
இச்செவ்வாயன்று நடத்திய கூட்டத்தில் எடுத்துரைத்தது. பதட்டமான இந்த நிலையை இலங்கை அரசு
விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கொழும்பு ஆயர்
மால்கம் ரஞ்சித் உட்பட பல புத்த மதத் தலைவர்களும், ஏனைய மதத் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.