துன்பம் என்பது இறை அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்.
பிப். 16. அன்பு என்பது துன்பங்களிலேயே பெரிய அளவில் புடமிடப்பட்டு ஆழமான மற்றும் பரிசுத்தமான
வகையில் வெளிப்படுத்தப்படுகிறது என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெதரிக்கோ
லொம்பார்தி.
துன்பமின்றி ஓர் உலகம் இருக்க முடியுமா என்பது நமக்குத் தெரியாது
என்ற திருப்பீடப் பேச்சாளர், கடவுளும் கிறிஸ்துவின் சிலுவையும் இல்லாத ஓர் உலகில் துன்பத்தின்
மறைபொருளான அர்த்தம் குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் முன்
வைத்தார்.
உலகின் நம்பிக்கையை என்றென்றும் தக்க வைத்து உரமூட்ட, துன்பம் என்பது
வாழ்வின் அவசியமான ஒரு பகுதியாக உள்ளது எனவும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.
துன்பம்
என்பது இறைவனின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என மேலும் கூறினார் அவர்.