2010-02-15 15:24:49

லூனார் புத்தாண்டைத் தொடங்கியுள்ள அனைத்து நாடுகளுக்கும் திருத்தந்தை வாழ்த்து


பிப்.15,2010 இஞ்ஞாயிறன்று லூனார் புத்தாண்டைத் தொடங்கியுள்ள அனைத்து நாடுகளுக்கும் தமது வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை.

வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் இம்மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வாழ்த்தைத் தெரிவித்த திருத்தந்தை, இன்று இப்புத்தாண்டைச் சிறப்பிக்கும் பல்வேறு ஆசிய நாடுகளை, எடுத்துக்காட்டாக சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளையும் உலகின் பல பகுதிகளில் வாழ்வோரையும் நினைக்கின்றேன் என்றும் கூறினார்.

இம்மக்கள் கொண்டாடும் இந்த விழா நாட்கள் குடும்பங்கள் உறுதிப்படவும் தலைமுறைகள் பிணைக்கப்படவும் நல்ல தருணங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இம்மக்கள் அனைவரும் தங்களின் கலாச்சாரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆன்மீக மற்றும் நன்னெறி மதிப்பீடுகளின் வளமையான பாரம்பரியங்களைத் தொடர்ந்து காத்து வருவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.