2010-02-15 16:40:35

பேராயர் செல்லி இந்தியாவில் சமூகத்தொடர்புத் துறை பயிற்சித் திட்டம் ஒன்றை துவக்கி வைத்தார்


பிப்.15,2010 இந்திய கத்தோலிக்க பொதுநிலைத் தலைவர்கள், துறவிகள் மற்றும் குருமட மாணவர்களுக்கான தேசிய அளவிலான சமூகத்தொடர்புத் துறை பயிற்சித் திட்டம் ஒன்றை புது டில்லியில் துவக்கி வைத்தார் பேராயர் Claudio Maria Celli.

இத்திட்டத்தைத் துவக்கி வைத்ததுடன் ஆசிரியர்களுக்கான மூன்று புத்தகங்கள் மற்றும் ஒரு ஒலி ஒளி குறுந்தகட்டையும் வெளியிட்ட வைபவத்தில் உரையாற்றிய சமூகத் தொடர்புக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Celli, சமூகத்தொடர்புத் துறையில் இந்தியத் திருச்சபையின் பணிகளுக்கான சிறந்த ஒரு கொடையாக இது இருக்கும் என்றார்.

சமூகத்தொடர்புத் துறையில் பயிற்சி வழங்குவதற்கு என மூன்று புத்தகங்களை உருவாக்கியுள்ள சமூகத்தொடர்புக்கான இந்திய ஆயர் பேரவையின் அவைக்கும், இந்திய தொன்போஸ்கோ தொடர்பு மையத்திற்கும் தன் பாராட்டுதல்களையும் வெளியிட்டார் பேராயர் Celli.








All the contents on this site are copyrighted ©.