பிப்ரவரி. 15. இஞ்ஞாயிறன்று மாலை இறைபதம் சேர்ந்த ஆயர் S.T. அமலநாதரின் அடக்கச்சடங்கு
இச்செவ்வாய் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பேராலயத்தில் தமிழக ஆயர்களின் கூட்டுத் திருப்பலியுடன்
இடம்பெறும்.
தூத்துக்குடி திரு இதய மருத்துவ மனையில் காலமான முன்னாள் ஆயர் அமலநாதர்,
1925ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி நாகப்பட்டிணத்தில் பிறந்து 1951ம் வருடம் தஞ்சாவூர் மறைமாவட்ட
குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1981ம் வருடம் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட
இவர், 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் 74ம் வயதில் உடல் நலம் காரணமாக பதவி விலகினார்.
84ம்
வயதில் காலமான அன்னாரின் இறுதி அடக்கச் சடங்கு இச்செவ்வாய் மாலை இடம்பெறும்.