2010-02-12 17:00:45

லாவோசில் 48 கிறிஸ்தவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்


பிப்.12,2010 லாவோசில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 48 கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்தை மறுதலிக்கும் வரையில் அக்காவலில் வைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக லாவோ சமய சுதந்திரத்திற்கான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் (HRWLRF) சர்வதேச கிறிஸ்தவ அமைப்பு (ICC) ஒன்றும் தெரிவித்தன.

லாவோசின் தென் மாநிலத்திலுள்ள காட்டின் என்ற கிராமத்தில் இஞ்ஞாயிறு திருவழிபாட்டின் போது மாவட்ட அதிகாரிகள் நூறு பேர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 48 கிறிஸ்தவ கிராம மக்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவ்வமைப்புகள் கூறின.

லாவோஸ் நாட்டில் 65 விழுக்காட்டினர் புத்தமதத்தினர் மற்றும் ஏறத்தாழ நாற்பதாயிரம் கத்தோலிக்கர் உட்பட 1.5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.