தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் இயேசுசபை காந்தியின் மறைவுக்கு வருந்துகிறார்கள்
பிப்.06,2010 இலங்கையில் ஏழை தேயிலை தோட்ட மற்றும் இரப்பர் தோட்டப் பணியாளர்கள் தங்களின்
காந்தி என அழைத்த, இத்தாலிய இயேசு சபை மறைபோதகர் ஆஞ்சலோ ஸ்தெஃபானிட்சி இறந்ததையொட்டி
அம்மக்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளனர்.
அருட்தந்தை ஸ்தெஃபானிட்சி, நோயினால்
இம்மாதம் 3ம் தேதி கண்டியில் இறைபதம் சேர்ந்தார். அவரின் அடக்கச் சடங்கு இவ்வெள்ளியன்று
நடைபெற்றது.
இவர், இலங்கையின் தேயிலை தோட்ட மற்றும் இரப்பர் தோட்டத் தொழிலாளர்களின்
வறுமையைப் போக்குவதற்கு 58 ஆண்டுகளாக உழைத்திருப்பவர். இவரைப் பற்றிக் கூறிய இலங்கை மாநில
இயேசு சபை அதிபர் அருள்திரு மரிய அந்தோணி, ஏழைகளின் மனிதர் ஒருவரை இழந்து விட்டோம் என்றார்.
அருட்தந்தை
ஸ்தெஃபானிட்சி இத்தாலியின் லெச்சேயில் 1919ம் ஆண்டு பிறந்தவர். 1936ம் ஆண்டு இயேசு சபையில்
சேர்ந்தார்